நிக்கோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிக்கோபார் தீவுகளின் இன்று காலை 6.08 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. எனினும் இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி முன்னெச்சரிக்கை எதுவும் வெளியாகவில்லை.