மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் இரண்டு நாட்களுக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
மொகரம் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படப்படுகிறது. இப்பண்டிகையின் போது ஊர்வலம் நடைபெறுவது வழக்கமானதாகும். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களான கராச்சி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் ஆகிய நகரங்களில் இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு, மொபைல் சேவை துண்டிக்கப்படுவதாக அந்நாட்டு தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.