tamilnadu

img

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு: 7 சிறுவர்கள் பலி

பாகிஸ்தானில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள டிர் காலனியில் ஸ்பன் ஜமாத் என்ற மசூதி உள்ளது. இந்தமசூதியின் ஒருபகுதியில் மத கருத்து போதிக்கும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படித்துக்கொண்டிருந்தனர். காலை 8.30 மணியளவில் எதிர்பாராத விதமாக சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்தனர்.மேலும் 70க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது. 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;