tamilnadu

பாக். விமான விபத்து பலி 97 ஆக உயர்வு

இஸ்லாமாபாத், மே 24- பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 99 பேருடன் கராச்சி புறப்பட்ட பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ) நிறுவனத்தின் பிகே 8303 என்ற விமானம் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். இந்த விபத்தில் 45 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. விமானம் கராச்சி விமான நிலையத்துக்கு அருகேயிருக்கும் குடியிருப்பு பகுதியில் விழுந்தது. மீட்பு பணிகள் தொடர்கின்றன. இந்நிலையில்  பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

;