tamilnadu

img

ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம் : கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ராணுவம் இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா திட்டமிட்டு கொலை செய்தது. அதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றச் சூழல் அதிகரித்துள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்தே பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், கச்சா எண்ணெய் மதிப்பு அன்றைய தினம் 4 சதவீதம் அதிகரித்தது. அதேபோல் தங்கத்தின் மதிப்பும் அதிகரித்தது.

இந்தநிலையில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரானின் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.இந்த ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக மத்திய ஆசியா சந்தையில், கச்சா எண்ணெய் விலை மீண்டும் 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் சந்தையில் பீப்பாய் கச்சா எண்ணெய் 69.21 டாலராக உயர்ந்துள்ளது. லண்டன் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 3 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. பிரெண்ட் சந்தையில் 73 சென்ட்டுகள் உயர்ந்து 69.02 டாலர்களாக விலை அதிகரித்துள்ளது. அதே போல், அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை 61 சென்ட்டுகள் அளவுக்கு உயர்ந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 63.31 டாலர்களாக உள்ளன. 
 

;