tamilnadu

img

நேபாள நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு...

காத்மண்டு
இமயமலை சாரலில் உள்ள நாடான நேபாளத்தின் சிந்துபால்சோக் பகுதியில் வெள்ளியன்று நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மொத்தம் 40-கும் மேற்பட்டோர் மண்ணிற்குள் புதைந்தனர். 2 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை 18 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 20-க்கும் மேற்பட்டோரை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. உயிருடன் மீட்கப்பட்ட நபர்கள் பற்றிய விபரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.  

;