மெக்சிகோ சிட்டி, பிப்.15- மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகா ணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் இருக்கின்றனர். திடீரென அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயின் தாக்கம் அதிகமாகி மளமள வென இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தை கள் அனைவரும் காப்பக கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்ட னர். இந்த தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் மூச்சுத் திணறி யும், தீயில் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த குழந்தைகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.