tamilnadu

img

துபாயில் விபத்து: 12 இந்தியர்கள் பலி

துபாய்,ஜூன் 7- துபாயில் வெள்ளியன்று சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 இந்தி யர்கள் பலியாகினர்.  31 பயணிகளுடன் ஓமனில் இருந்து துபாய்க்கு ஆம்னி பேருந்து வந்துகொண்டி ருந்தது. துபாயில் ஐ ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே பேருந்துகள் நுழைவதற்கு வசதி இல்லாத குறுகிய சாலையில் நுழைந்த ஆம்னி பேருந்து, சாலையோரம் இருந்த பெயர்ப் பலகை யில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 17 பயணிகள் பலியா கினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.  பலியா னவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. பலியானவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ராஜகோபாலன், பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பெரோஸ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்கவீட்டில், கிரண் ஜான்னி, வாசுதேவ், திலக்ராம் ஜவகர் தாகூர், உம்மர் சோனோகடவத், அவரது மகன் நபில் உம்மெர் என்பது தெரிய வந்துள்ளது. ரஷீத் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த 4 இந்தியர்கள் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.

 

;