tamilnadu

img

ஆப்கானிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா... 

காபூல் 
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் இரண்டாவது கட்ட ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் அங்கு வெறும் 200 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அடுத்த 2 மாதங்களில் வேகமெடுத்த கொரோனா பரவல் தாறுமாறாகப் பரவியது. குறிப்பாக மே முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டியது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 16 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை சற்று கட்டுப்பாட்டில் உள்ளது.இன்று 5 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஆப்கானிஸ்தானில் 1450 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.   

;