tamilnadu

img

ரூ.35க்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் மாத்திரை, சன் பார்மா அசத்தல்

ரூ.35க்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் மாத்திரை. மிதமான மற்றும் லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ரூபாய் 35 விலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரை வழங்க இருப்பதாக சன் பார்மா அறிவித்துள்ளது.

மாத்திரை ஒன்று ரூபாய் 35 என்ற விலையில் ஃபேவிபிராவிர் என்ற மருந்தை விற்பனை செய்ய உள்ளதாக சன் பார்மா அறிவித்துள்ளது. இந்த மருந்து இலேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பை குணமாக்கும் வகையில் இருக்கும் என்றும் ஆண்டிவைரல் மருந்தாக இது இருக்கும் என்றும் சன் பார்மா தெரிவித்துள்ளது

இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் லேசான பாதிப்பு உள்ளவர்கள் அதிக செலவின்றி இந்த மாத்திரைகளை பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்று சன் பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்திலிருந்து இந்த மருந்துகள் மருந்து கடைகளில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

;