tamilnadu

img

பெரு நாட்டில் இரட்டை அடுக்கு பேருந்தில் தீ விபத்து

பெரு நாட்டின் லிமாவில் இரட்டை அடுக்கு பேருந்து தீப்பிடித்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகி உள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.

பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இருந்து சுமார் 100 பயணிகளுடன் சிக்லாயோ நகரை நோக்கி ஒரு இரட்டை அடுக்கு பேருந்து இன்று புறப்பட்டு சென்றது. வழியில் சான் மார்ட்டின் டி போர்ரெஸ் மாவட்டத்தில் உள்ள நிறுத்தத்துக்குள் நேற்றிரவு நின்றிருந்த அந்த பேருந்தின் என்ஜின் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

சில நொடிகளுக்குள் பேருந்தின் இருக்கைகள் வழியாக மளமளவென்று பரவிய தீயில் பயணிகள் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக, மேல் அடுக்கு படுக்கையில் இருந்த பயணிகள் கீழே இறங்கி வர முடியாமல் தவித்தனர். இதற்குள் பயங்கர சப்தத்துடன் பேருந்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


;