tamilnadu

img

பிலிப்பைன்ஸ்: நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலி


பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பிலிப்பைன்ஸ் நாட்டின் லூஜன் தீவின் வடக்கே இத்பயாத் நகரின் வடகிழக்கே 12 கி.மீ. தொலைவில் 12 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை 4.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.4 ஆக பதிவானது. இந்நிலநடுக்கத்தினால் வரலாற்று சிறப்பு வாய்ந்த பல வீடுகள் இடிந்து விழுந்தன.
அதிகாலை வேளையில் தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.  எனினும் சில இடங்களில் சாலைகளிலும் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி .  60 பேர் காயமடைந்தனர் என மேயர் சாகன் உறுதிப்படுத்தி உள்ளார்.  இதனை அடுத்து காலை 7.38 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 6.4 ஆக பதிவானது.  பஸ்கோ மற்றும் சப்தங் நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து நடந்த நில நடுக்கங்களால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 


 

;