tamilnadu

img

முப்பதாம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் அகில இந்திய அச்சக தொழிலாளர் சம்மேளனம்

1936ஆம் ஆண்டு ஜூலை 13, 14 தேதிகளில் சென்னை மாகாண தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் எலுரு என்ற இடத்தில் நடந்தது. தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியால் அமைக்கப்பட்டுள்ள ஆர்கனைசிங் கமிட்டியில் சேர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் கூட்டாக காங்கிரசில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசும், அகில இந்திய சோசலிஸ்ட் கட்சியும் ஆலோசனை கூறியதை கமிட்டி விமர்சித்தது. இணைக்கப்பட்ட சங்கங்களின் ஸ்தாபன தத்துவார்த்த சுதந்திரத்தில் காங்கிரஸ் தலையிடக்கூடாது என்று கமிட்டி வற்புறுத்தியது. சிவில் உரிமை சங்கங்களை ஆரம்பிக்கும் ஜவஹர்லால்நேருவுக்கு ஆதரவு கொடுத்ததற்காக அமீர்ஹைதர்கானை கைது செய்ததை கமிட்டி கண்டித்தது.  1936 ஜூலை 14ஆம்தேதி ஒரு பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி.சுந்தர ராமரெட்டி காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் திட்டம் மேம்போக்காக இருப்பதாக விமர்சித்தார். இந்தத் திட்டம் மார்க்சிசம், லெனினிசத்திற்கு இயைந்ததாக இறுதியில் ஒரு கம்யூனிஸ்ட் அரசை ஸ்தாபிப்பதாக இருக்க வேண்டும் என்றார். அனேகமாக எல்லா சங்க உறுப்பினர்களும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். நடைமுறையில் சங்கம் என்ற பெயரில் ஒரு சில கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களைத் தவிர மற்ற எந்த வேலையும் நடக்கவில்லை.

அகில இந்திய அச்சக தொழிலாளர் சம்மேளனம்
934ஆம் ஆண்டு அக்டோபர் கடைசியில் இந்திய அச்சக தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் பம்பாயில் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் இந்த ராஜதானியில் இருந்து பி.சுந்தர ராமரெட்டி (பி.சுந்தரய்யா) உள்பட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மாகாணங்களின் அகில இந்திய அச்சக தொழிலாளர் சம்மேளன மாநாட்டை டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அகில இந்திய அச்சக தொழிலாளர் சம்மேளன மாநாட்டை டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அகில இந்திய அச்சக தொழிலாளர் சம்மேளன மாநாடு 1934 டிசம்பர் 29, 30ஆம் தேதிகளில் லக்னோவில் நடந்தது. பி.சுந்தரராமரெட்டி இந்த மாநாட்டுக்கு பிரதிநிதியாக பி.மாணிக்கம் என்ற அச்சுத் தொழிலாளியை அனுப்பினார். மாணிக்கம் சென்னையைச் சேர்ந்த ஒரு கம்யூனிஸ்ட், சென்னை இளம்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் கிளைகளும், சென்னை இளம் தொழிலாளர் சங்கமும், இந்த மாகாணத்தில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கு இயைந்தவாறு செயல்பட்டன. இவை 1934ஆம் ஆண்டு ஜூலை, செப்டம்பர் மாதங்களில் சட்டவிரோதமான அமைப்புகளாக அறிவிக்கப்பட்டன. இளம்தொழிலாளர் சங்கம் என்ற பெயரிலோ அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னைக் கிளை என்ற பெயரிலோ வெளிப்படையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. அமீர் ஹைதர்கான் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு பி.சுந்தரராமரெட்டி இதனை ரகசியமாக ஸ்தாபித்தார். ஆகவே சுந்தரராமரெட்டி இந்த மாகாணத்திலுள்ள இதர கம்யூனிஸ்ட்டுகளின் உதவியுடன் தங்கள் சட்டவிரோத, தலைமறைவு வேலைகளை மூடிமறைக்க பல்வேறு மையங்களில் அச்சகத் தொழிலாளர் சங்கங்களையும், தொழிலாளர் பாதுகாப்பு சங்கங்களையும் ஏற்படுத்தினார். சென்னை, குண்டூர், நெல்லூர், தெனாலி, பெஜவாடா, எலுரு ஆகிய இடங்களில் அச்சக தொழிலாளர் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தச் சங்கங்களை அமைக்க ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்தனர். 1935 நவம்பர் 2, 3 தேதிகளில் அகில இந்திய அச்சகத் தொழிலாளர் சம்மேளன கூட்டம் பம்பாயில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பி.சுந்தர ராமரெட்டி கலந்து கொண்டார். இந்த சம்மேளனத்தின் இரண்டாவது மாநாட்டை சென்னையில் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை அச்சகத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளைக் கொண்ட வரவேற்புக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. 1936ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம்தேதி வாரணாசியைச் சேர்ந்த ராமண்ணா என்பவர் தலைமையில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பம்பாயிலிருந்து டி.கே.டோலி, வி.டி.சிட்டாலி, ஆர்.ஆர்.பெட்னிகார், கல்கத்தாவில் இருந்து ஏ.எம்.ஏ.ஜமான், லாகூரில் இருந்து பத்ரிநாத், மீரட் சதி வழக்கில் சம்பந்தப்பட்டு விடுதலையான எஸ்.வி.காட்டே, பி.சுந்தரராமரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் வாசகங்கள் அடங்கிய அட்டைகள் மாநாட்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டு வாயிலில் கம்யூனிஸ்ட் சின்னம் தாங்கிய கொடியை இந்த மாகாணத்தைச் சேர்ந்த பி.ஜீவானந்தம் ஏற்றிவைத்தார். ரஷ்ய உதாரணத்தை பின்பற்ற வேண்டும் என்றும், தொழிலாளர்கள் தங்கள் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் சிந்தி செங்கொடியின் புனிதத் தன்மையையும், மேன்மையையும் பாதுகாக்க வேண்டும் என்றும் ஜீவானந்தம் அறைகூவல் விடுத்தார். தமிழ்நாடு அச்சகத் தொழிலாளர் சங்க உறுப்பினர் சிவஞானம் மாநாட்டைத் திறந்து வைத்தார். ரஷ்ய பாணியில் இந்தியத் தொழிலாளர்கள் ஒரு தொழிலாளர் அரசை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சென்னை அச்சகத் தொழிலாளர் சங்க உறுப்பினர் பி.ராஜவடிவேலு பிரதிநிதிகளை வரவேற்றுப் பேசினார். இந்த மாநாட்டில் அகில இந்திய அச்சகத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைமையகம் சென்னையில் இருந்து பம்பாய்க்கு மாற்றப்பட்டது. அதன் பொதுச் செயலாளராக பி.மாணிக்கமும், நிர்வாகக்குழுவில் இந்த மாகாணத்தைச் சேர்ந்த டி.ஜி.சடகோபன், எஸ்.வி.காட்டே ஆகியோரும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களாக இருந்தனர். பி.சுந்தர ராம ரெட்டி இந்த சம்மேளனத்தின் நிர்வாகியாக இல்லாதிருந்த போதிலும் சம்மேளனத்தின் எல்லா வேலைகளையும் எல்லா தகவல் தொடர்புகளையும் செய்து வந்தார். பி.மாணிக்கம் நடைமுறையில் பெயரளவிலான தலைவராகவே இருந்தார்.தேர்ந்தெடுக்கப்பட்டனர்.