ஊரடங்கு காலத்தை பய னுள்ள வகையில் கடந்து செல்ல புத்தக வாசிப்பு பயன்படுகிறது. அனைத்து நாடுகளை யும் ஆட்டிப்படைக்கும் உலகின் வல்லரசான அமெ ரிக்காவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா. எனவே ‘அமெரிக்காவின் மறுபக்கம்’ என்ற புத்தகத்தை ஆவலுடன் வாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.கொரோனாவால் அமெரிக்கா மட்டுமின்றி பணக்கார நாடுகள் என்று சொல்லக்கூடிய ஐரோப்பிய நாடுகள் பலவும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
வளம் குறைந்த சிறிய நாடுகளைவிட அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்ட பாதிப்பு அதிகம். வறு மையான நாடு என்றால் உடனடியாக நினைவுக்கு வரக் கூடிய சோமாலியாவில் கொரோனாவால் இறப்பு சதவீதம் 5%, எத்தியோப்பியாவில் 2%, பல ஆண்டுகளாக குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் வாழும் ஈராக்கில் இறப்பு சதவீதம் 5%. சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்கள் விகிதம் 60% சதம். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு உட்பட்ட ஈரானில் நோய் தாக்குதலுக்கு உள்ளான 80 சதம் பேர் சிகிச்சை முடிந்து நோயிலிருந்து விடுபட்டு விட்டனர் .சாதா ரண, வசதி குறைந்த, பல்வேறு பொருளாதார கஷ்டங்க ளுக்கு ஆளாகியுள்ள நாடுகளில் எல்லாம் இறப்பு விகித மும் சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்கள் விகிதமும் அதிக மாக உள்ள நிலையில் சிகிச்சை முடிந்து குணமானவர்கள் எண்ணிக்கை அமெரிக்காவில் என்றும் 10 சதம் தான். அதே போல் பல ஏழை நாடுகளை விட இறப்பு விகிதமும் அதிகம்.
ஏனிந்த நிலைமை என்பதற்கு இப்புத்தகத்தில் விடை உள்ளது. அமெரிக்காவின் மறுபக்கம் புத்தக ஆசிரியர் நாகேஸ்வரி அண்ணாமலை (வயது80) அமெரிக்காவில் வசித்து வருபவர் .
கொரானா பேரிடர் நேரத்தில் அமெரிக்க மக்கள் கொத்துக்கொத்தாக செத்து வரும் நிலையில் அமெரிக்கா வில் இதுபோன்றஅவலம் வரும் என்பதை 10 ஆண்டு களுக்கு முன்பே உணர்ந்து எழுதியுள்ளார் நாகேஸ்வரி அண்ணாமலை. அமெரிக்காவின் மருத்துவ வசதி பற்றி 21 பக்கங்களில் பதிவு செய்துள்ளார். ராணுவம், பொருளா தாரம், அரசியல் மற்றும் கலாச்சாரம் ஆகிய எல்லா துறைக ளிலும் அமெரிக்கா சிறந்த நாடாக தன்னை நிலைநாட்டிக் கொண்டாலும் மற்ற வளர்ந்த நாடுகள் எல்லாவற்றையும் விட மருத்துவத்துறையைப் பொருத்தவரை பின்தங்கியே இருக்கிறது என்று குறிப்பிட்டுத்தான் மருத்துவம் பற்றிய பகுதியை ஆரம்பித்துள்ளார்.
120 ஆண்டுகளாக...
உலகத்தில் மருத்துவத்திற்காக அமெரிக்கா செலவிடும் தொகை மற்ற நாடுகளை விட அதிகம் .அமெரிக்க அர சாங்கம் மருத்துவத்திற்காக மற்ற நாடுகளை விட கூடுதல் தொகையையே தனது பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. அமெரிக்காவில் உள்ள மக்களுக்கு மருத்துவ வசதி மிகப் பெரிய அளவிற்கு குறைபாடாக உள்ளது என்பது அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளுக்கும் தெரியும். கடந்த 120 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் மருத்துவ பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்பதே வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதியாக இருந்துள்ளது.
புகழ்பெற்ற ஜனாதிபதிகள் ரூஸ்வெல்ட், ஜான் கென்னடி, கடைசியாக பாரக் ஒபாமா உட்பட அமெ ரிக்க மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்வோம் என முழங்கினர். 120 ஆண்டுகளாக அமெரிக்காவில் மக்க ளுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்று பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனா லும்கூட அமெரிக்காவால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாததற்கு அடிப்படைக் காரணம் மருத்துவ வசதிகளும் மருத்துவமனைகளும் மருத்துவம் சம்பந்தப்பட்ட காப்பீடும் பெருநிறுவனங்களின் கையில் இருப்பதுதான்.
அமெரிக்க ஜனாதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு அமெரிக்காவில் மருத்துவம் முற்றிலும் தனியார் மயம். பணமில்லாமல் மருத்துவம் என்பது கற்பனைகூட செய்யமுடியாத விஷயம். அமெரிக்காவில் காப்பீட்டு கம்பெனிகள் மருத்துவத்தின் மூலம் அடிக்கும் கொள்ளை, கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் நடைபெறும் சூதாட்டம் அனைத்தும் இப்புத்தகத்தில் விவ ரிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனை கருவிகளை, மருத்துவமனைகள் பலகோடி டாலர் செலவு செய்து வாங்குகின்றன. அவ்வாறு செலவு செய்த பணத்தை திருப்பி எடுக்க வேண்டுமென்ற காரணத்திற்காகவே தேவையற்ற முறையில் ஸ்கேன் போன்ற நவீன கருவிகளில் சோதனை செய்வது போன்ற பல பிரச்சனைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நமது நாட்டிலும் மருத்துவமனைகள் கார்ப்பரேட் மயமாகி வருவதும்இந்த மருத்துவமனைகளில் இது போன்ற கருவிகளில் சோதனை செய்யச் சொல்லி மக்களி டமிருந்து பணம்பறிமுதல் செய்ய வழிகாட்டியதும் அமெரிக்க மருத்துவமனைகள்தான்.
காப்பீடு கார்ப்பரேட்டுகளின் ராஜ்ஜியம்
மருத்துவம் பார்த்த நோயாளிகள் இறுதியில் பணம் கட்ட முடியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க எல்லோ ரும் எங்கள் மருத்துவமனைக்கு வாருங்கள், ஆறு டாலர் கொடுத்தால் வருடம் முழுவதும் குடும்பத்திற்கு சிகிச்சை என்ற அறிவிப்போடு ஆரம்பிக்கப்பட்ட காப்பீட்டு முறை இன்றைக்கு மாபெரும் லாபமீட்டும் துறையாக வளர்ந்துள் ளது மட்டுமின்றி, அமெரிக்க அரசியலையே ஆட்டிப் படைக்கும் சக்தி படைத்த கார்ப்பரேட் கம்பெனிகளாக மாறிவிட்டது.
அமெரிக்க அரசாங்கம் வயதானவர்களுக்கும் ஏழைக ளுக்கும் இன்சூரன்ஸ் பிரீமியத்தை கட்டுவதாக அறிவித்து அரசாங்கம் பணம் கட்டி வருகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது பிரீமியத்தை கூட்டி வருகின்றன. மேலும் அரசு காப்பீட்டுக்கு மேல் கூடுதல் சிகிச்சை செலவிற்காக நோயாளிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. அமெரிக்க அரசின் பட்ஜெட்டில் தொகை கூடியதே ஒழிய சாதாரண மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை காப்பீடு என்ற பெயரால் அரசின் கஜானா, காப்பீட்டு கம்பெனிகளுக்கு திறந்துவிடப்பட்டது.
அமெரிக்க மக்களுக்கு மருத்துவத்திற்கான செலவு அதிகமாகிறது. இதைத் தவிர்க்க ஆலோசனை கூறக்கூடிய தன்னார்வ நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் உருவாகி தற்போ தும் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் கூட அமெரிக்க மக்களின் மருத்துவ பிரச்சனை தீரவில்லை மறுபுறத்தில் மருத்துவ ஆராய்ச்சிக்காக பெரும் தொகையை அமெரிக்க அரசாங்கம் செலவு செய்தது. அவ்வாறு செலவு செய்யும் பணத்தின் மூலம் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனுடைய காப்புரிமையை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிப்பதும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. முழுக்க முழுக்க மருத்துவம் பணம் சம்பாதிக்கும் தொழிலாகவே மாறிவிட்டது.
கம்யூனிஸ்ட் அறிக்கை குறிப்பிட்டது போல...
மாமேதைகள் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இணைந்து உரு வாக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில், முதலாளித்துவத் தினுடைய கோரமுகம் தோலுரித்துக்காட்டப்பட்டிருக்கும்.
இதுவரை போற்றிப் பாராட்டப்பட்டு பணிவுக்கும் பக்திக்கும் உரியதாக இருந்த ஒவ்வொரு பணியையும் முதலாளித்துவம் மகிமை இழக்கச் செய்துவிட்டது; அது மருத்துவரையும் வழக்கறிஞரையும் சமய குருவையும் விஞ்ஞானியையும் கவிஞரையும் தனது கூலி உழைப் பாளராக மாற்றிவிட்டது எனக் குறிப்பிட்டு இருப்பர். கம்யூ னிஸ்ட் அறிக்கை குறிப்பிட்டது போல மருத்துவம் என்பது மனித உயிரை காப்பாற்றுவது என்பது மாறி பணம் சம்பாதிக்கும் நூதன தொழிலாக கார்ப்பரேட்டுகளால் மாற்றப்பட்டுவிட்டது. அமெரிக்காவில் எல்லாமே இன்சூரன்ஸ்தான். கர்ப்பிணிப் பெண்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று பொதுவாக மருத்துவர்கள் நாள் நிர்ணயிப்பார்கள். அவ்வாறு நாள் நிர்ணயிக்கும் பலருக்கு மருத்துவர் நிர்ணயிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பா கவே இன்ஷூரன்ஸ் காலம் முடிந்துவிடும். எனவே முன் கூட்டியே மருத்துவமனைக்குச் சென்று செயற்கையாக பிரசவ வலியை உருவாக்கி அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் அவலம் அன்றாடம் அரங்கேறி வருகிறது. மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனி களின் ஆதிக்கம் ஒழிக்கப்படவேண்டும்; அரசே மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற முழக்கம் இப்போது அமெரிக்காவில் ஒலிக்கத் துவங்கியுள்ளது என இப்புத்தக்கதில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
இப்போது அமெரிக்கா நோய் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மக்கள் மடியும் நிலை என்பது, மருத்துவம் சேவைத் தொழில் என்பதை மாற்றி லாபம் ஈட்டும் தொழிலாக முதலாளித்துவம் மாற்றியதால் ஏற்பட்ட அவலம் தான்.
நமது நாட்டிலும்...
நமது நாட்டிலும் தமிழகத்தில் உட்பட அரசு மருத்துவ மனைகளுக்கு உரிய நிதி ஒதுக்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் காப்பீட்டு திட்டங்களில் பொதுமக்களை உறுப்பினராக வைத்து அரசு பணம் கட்டுவதற்கும் இந்த மோசமான முன்னுதாராணம்தான் காரணம். எனினும் நமது நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் ஓரளவு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அடிப்படைக் காரணம் அரசு மருத்துவமனைகளே. அரசு மருத்துவமனைகள் கட்டமைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய மாநிலங்களில் சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்கள் விகிதம் அதிகமாகவும் இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது. இதிலும் குறைபாடு உள்ள மாநிலங்களில் மக்கள் துன்ப துயரத்தை அனுபவித்து வருகின்றனர் .அமெ ரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு நமது கல்வி யையும் மருத்துவத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க நட வடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள மோடி வகைய றாக்களுக்கும், அது சரி என்று வாதிடும் சில அறிவு ஜீவிகள் கார்ப்பரேட் ஊடகங்கள் போன்றவற்றிற்கும் பாடத்தை கற்பித்துள்ளது இன்றைய நெருக்கடி.
கொரோனாவுக்கு பின்பு உலகத்தின் பல நடவடிக்கை கள் மறு விவாதத்திற்கு உட்படுத்தப் பட வேண்டும். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தூக்கிப்பிடித்த உலகமயம், தனியார்மயம், தாராளமயம் ஆகியவற்றை தூக்கியெறிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலகத்தில் சோசலிச நாடுகள் மக்களுக்கு ஆற்றிவரும் சேவை, நமது நாட்டிலும் கூட சோசலிச பாணியில் உருவாக்கப்பட்ட பொதுத்துறைகள், சுகாதார வசதிகள் போன்றவைதான் மக்களுக்கு பயன்படும் என்பதை நடைமுறை உணர்த்தியுள்ளது. எனவே இப்போதைய அனுபவ வெளிச்சத்தில் எதிர்கால நமது இலக்குகளை தீர்மானிப்போம்.