லோடு மேனுக்கு கூலியும் இல்லை; அதிகாரிகள் மெத்தனம்
கும்பகோணம், பிப்.25- தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயி கள் நெல்லை கொள்முதல் செய்ய சாக்கு இல்லாமல் சுமை தூக்கும் பணி யாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜீவ பாரதி கூறியதாவது: தஞ்சை மாவட்டம் திருவிடைமரு தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 48 ஊராட்சிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் சென்று விற்பனை செய்ய விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் பிடிப்பதற்கு போதுமான சாக்கு இல்லாமல் திரு விடைமருதூர் ஒன்றியம் திருவிசநல் லூர், திருச்சேறை நாலூர் போன்ற ஏரா ளமான மையங்களில் நெல் பிடிப்ப தற்கு சாக்கு இல்லாமல் விவசாயிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நெல் குவியலாக மையங்களில் வைத்து இரவு பகலாக காத்திருக்கும் சூழ்நிலை இரு ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த காலங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டை களை அவ்வப்போது நெல் கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் திறந்தவெளி கொள் முதல் நிலையங்களில் நெல் மூட்டை கள் அடுக்கி வைக்கப்பட்டு வெயிலில் காய்ந்து எடை குறைய வாய்ப்பாக உள்ளது. இதனால் கொள்முதல் செய் யும் பணியாளர்களிடம் நிர்வாகம் எடை குறையும் நெல்லுக்கான தொகையை வசூலித்து வருகிறது நெல் கொள் முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த ஒரு மாத மாக சுமை தூக்கும் கூலி வழங்கப்படா மல் இருக்கிறது இதனால் சுமை தூக் கும் தொழிலாளர்கள் கொள்முதல் பணி யாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள் ளாகியுள்ளனர். ஆகவே உரிய காலத்தில் விவசாயி கள் கொண்டு வரும் நெல்லை பிடிப்ப தற்கும் சாக்குகள் அனைத்து மையங்க ளுக்கும் தட்டுப்பாடின்றி வழங்கவும் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு உட னடியாக கூலியை வழங்கிடவும் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.