பெட்ரோல், டீசல் தொடர்ந்து 13வது நாளாக அதிகரித்துள்ளது. மக்கள் மீதான மத்திய அரசின் இந்த தாக்குதலைக் கண்டித்து, நாகர்கோவிலில் வெள்ளியன்று ஆட்டோவை கயிறு கட்டி இழுக்கும் நூதனப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, டி.நாகராஜன், கே.மோகன், அசீஸ், மீனாட்சி சுந்தரம், ராஜநாயகம், பரமசிவம், பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.