சென்னை,ஆக. 30 உலகளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டு வரும் நிலையிலும், இந்திய, ஆப்பி ரிக்கா, ஆசிய நாடுகளுக்கி டையே வணிக பரிவர்த்தனைக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவ தாக ஆந்திர வர்த்தக சபை தலை வர் வி.எல். இந்திரா தத் தெரி வித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர் தமது சபை யின் சார்பில் விரைவில் ஆப்ரோ- ஏசியன் வர்த்தக தொழில்துறை யினர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை யில் நடத்தப்படும் என்றார். வர்த்தகமும் முதலீடும் ஒன்றோ டொன்று கைகோர்த்து செல்ல வேண்டும் என்றும் நாடுகளி டையே இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த தொழில் சந்திப்பு நிகழ்வின் முக்கிய நோக்கம் என்றும் ஆசி யான் அமைப்பில் இடம்பெற் றுள்ள நாடுகள் மற்றும் இந்தியா இடையே இரு தரப்பு வர்த்தகம் 80 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வளர்ச்சி தொடருமா னால், 2020 ஆம் ஆண்டில் ஏசியன் நாடுகள் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான வர்த்தகம் 100 பில்லி யன் அமெரிக்க டாலரை தொடக் கூடும், என்றார். டாக்டர் இந்திரா தத் மேலும் கூறுகையில், வர்த்தக தடைகளை நீக்குவது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கங்க ளிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.