tamilnadu

img

ரூ.30 ஆயிரத்தை கடந்தது தங்கம்

சென்னை:
தங்கம் விலை வியாழனன்று 30 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையானது.   கடந்த ஒரு மாத காலமாகவே ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் வியாழனன்று  காலையில் தங்கம் விலை அதிகரித்து, மீண்டும் பவுன்  30 ஆயிரத்தைகடந்தது. இதனிடையே பிற்பகலில் தங்கம் விலை பவுனுக்கு 96 ரூபாய் குறைந்தது.  காலையில் 30 ஆயிரத்து 24ரூபாய்க்கு விற்பனையான ஒரு பவுன்  ஆபரணத்தங்கம், பிற்பகலில் 29 ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 12 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 741ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

;