சென்னை,பிப்.21- கடந்தாண்டு இறுதியில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை புத்தாண்டு தொடங்கிய சில நாட்களி லேயே தங்கம் விலை ஏறுமுகமானது. ஏற்கனவே ஒரு சவரன் 31 ஆயி ரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தொடர்ந்து 4ஆவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை (பிப்.20) 3 ஆயிரத்து 978 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆப ரணத்தங்கம், வெள்ளியன்று(பிப்.21) 73 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 51 ரூபாய்க்கு விற்பனையாகி வரு கிறது. 31 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கம், ஒரே நாளில் 584 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 90 பைசா அதிகரித்து ஒரு கிராம் 52 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையா கிறது. பார்வெள்ளி ஒரு கிலோ 900ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.