இந்தியாவில் கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியதால் மக்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை முழுவதுமாக எடுத்து , சேமிப்பு கணக்கை மூடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதை தடுக்கவும் ,சேமிப்பு கணக்கை அதிகரிக்கவும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிககள் பல்வேறு வசதிகளையும் ,புதிய சலுகையையும் கொடுத்து வருகிறது .இதில் ஒவ்வொரு வங்கியும் அதன் சேமிப்புக் கணக்கிற்கான ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளன, இது பொதுவாக 3.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கும் .
இதன் தொடக்கமாக கீழ்க் கண்ட 10 வங்கிகள் தனது வாடிக்கையாளர்களை ஈர்க்க சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது..
1. ஐ.டி.எஃப்.சி முதல் வங்கி(IDFC First Bank)
2. ஆர்.பி.எல் வங்கி (RBL Bank)
3. Au சிறு நிதி வங்கி(Au Small Finance Bank)
4. பந்தன் வங்கி (Bandhan Bank)
5.இந்துஸ்இந்த் வங்கி (IndusInd Bank)
6. உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி(Ujjivan Small Finance Bank)
7. லட்சுமி விலாஸ் வங்கி(Lakshmi Vilas Bank)
8. டி.சி.பி வங்கி (DCB Bank)
9. எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank)
10. தென்னிந்திய வங்கி (South Indian Bank)
இதில் பெரும்பாலான வங்கிகள் தனியார் துறை வங்கிககள் என்பது குறிப்பிடத்தக்கது.