உணவுப்பொருட்களை சுவை பார்த்து சொல்வதற்காக தினமும் 129 டாலர் சம்பளத்திற்கு ஊழியர்களை நியமிக்க இங்கிலாந்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்று திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்தின் கிராஸ்மியர் நகரில் டஃபோடில் உணவகம் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவை மிகுந்த உணவு வழங்குவதை, உறுதி செய்வதற்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கி உள்ளது. அதாவது, உணவகத்தில் தயாரிக்கப்படும் டீ மற்றும் நொறுக்குத் தீனிகளை (ஸ்னாக்ஸ்) சுவை பார்த்து சொல்வதற்காக பிரத்யேக ஊழியர்களை நியமிக்க உள்ளது. அவர்களுக்கு தினமும் 129 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 9 ஆயிரம் ரூபாய்) சம்பளம் வழங்க உள்ளது.
இந்த வேலைக்காக உணவகத்தின் இணையதளத்தில் பலரும் விண்ணப்பித்து உள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்படும் சுவை-சோதனையாளர்கள் தேநீர் மற்றும் பீட்ரூட் மற்றும் மட்டன் சீஸ் ஸ்கோன்கள், மாலை நேரம் சாப்பிடும் பிஸ்கட்டுகள் மற்றும் பெப்பர்மிண்ட பை (ரொட்டி) உள்ளிட்ட சிற்றுண்டிகளை சுவைத்து சோதனை செய்வார்கள் என்று உணவகத்தின் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளது.