tamilnadu

img

வியன்னா தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது 

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா பகுதியில் உள்ள தேவாலயம் அருகே 6 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். இதில், துப்பாக்கி சூடு நடத்திய நபரும் இறந்தார். 15 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உலகின் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அபுதாங் அல்பேனி என அவரது படமும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் பயங்கரவாதி அல்பேனி துப்பாக்கி, வெட்டும் ஆயுதங்களை கையில் வைத்துள்ளார்.