tamilnadu

img

ஆப்பிரிக்கா: தேவாலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார் உட்பட 6 பேர் பலி

ஆப்பிரிக்காவில் தேவாலயம் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் பாதிரியார் உட்பட 6 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 ஆப்பிரிக்காவின் பர்கினோ பாசோ நாட்டின் டாப்லோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். அப்போது சுமார் 20 முதல் 30 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் தேவாலயத்தில் நுழைந்து கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார் உட்பட 6 பேர் பலியாகினர். 


பின்னர் அந்த கும்பல் அருகில் உள்ள கடைகள் மற்றும் மருத்துவமனைக்கு தீ வைத்து அங்கிருந்த பொருட்களையும், வாகனம் ஒன்றையும் திருடிச் சென்றது. இச்சம்பவம் பர்கினோ பாசோவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 5 வாரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட 3-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.