காபூல்,
ஆப்கானிஸ்தானில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சிக்கி 37 போலீசார் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள தஹேர் மாகாணத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடி ஒன்றில் இன்று அதிகாலை போலீசார் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 37 போலீசார் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.