ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் சிக்கி 34 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின், ஹெராட் கந்தகார் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். . இதில் பெண்கள், குழந்தைகள் என 34 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
2019 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், 1,360 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 2440 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் குறைந்தது 327 பேர் குழந்தைகள் என்று ஆப்கானிஸ்தானில் ஐ.நா. உதவித் திட்டம் (யுனாமா) அறிக்கை கூறுகிறது.