அசாமில் எண்ணெய் குழாய் வெடித்து 3 நாட்களாக ஆற்றில் தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அசாம் மாநிலத்தில் திப்ரூகர் மாவட்டத்தில் துலியாஜன் என்ற பகுதி அருகே உள்ள புர்ஹி திஹிங் ஆற்றின் கரைபகுதியில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் குழாய்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த குழாயில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கரும்புகையுடன் தீப்பிழம்புகள் மேலேறி வந்தது. இதைகண்ட அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 3 நாட்கள் பற்றி எரியும் தீயால் ஆற்றின் உயிர்ச்சூழல் பாதிக்கப்படும் என்றும் ஆயில் இந்தியா நிறுவன அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.