tamilnadu

img

புதுச்சேரியில் அல்லல்படும் தொழிலாளர்கள் ரூ.5000 நிவாரணம் வழங்குக: சிபிஎம்

புதுச்சேரி, ஏப். 8- ஊரடங்கு உத்தரவால் அல்லல்பட்டு வரும் அமைப்புசாரா, கட்டுமானத் தொழி லாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உடனே வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுச்சேரி பிர தேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கொரோனா தொற்று நோயை  தடுக்க புதுச்சேரி அரசு அமல்படுத்தி யுள்ள ஊரடங்கு உத்தரவால் கிரா மப்புற தொழிலாளர்கள், கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் அன்றாட கூலித்  தொழிலாளர்கள் என விளிம்புநிலை மக்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தோடு, கடந்த 18 நாட்காளாக  வருமானம்  இன்றி வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளனர். தங்களது வீட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்கள் இன்றி உணவுக்கு அல்லல்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமா னம் இன்றி தவிக்கும் பெரும்பாளான குடும்பங்களில் அவர்களது உறவுமுறை கள் சிதைக்கப்பட்டு,சன்டை சச்சரவுகள் அதிகரித்துள்ளன.

புதுச்சேரி ரேஷன் கடைகளிலும் எந்த வித அரிசி,கொதுமையும் அரசு வழங்க  நடவடிக்கை எடுக்கவில்லை. உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளும் புதுச்சேரி யில் இல்லாத நிலையில் பெரும்பால னோர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக தான் வேலை செய்து,சொற்ப ஊதி யத்தில் வாழ்க்கையை நடத்தி வரு கின்றனர்.

புதுச்சேரி முதல்வரும் தேவைப் பட்டால் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிக்கப்படும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஏற்படாமல் மக்களை  பாதுகாக்க புதுச்சேரி அரசு பல நடவடிக்கைளை மேற்கொண்டுவருகிது. அதேநேரத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு தவிக்கும் விளிம்பு நிலை மக்க ளின் அடிப்படையான உணவு தேவை களுக்கான ஏற்பாடுகளையும் செய்ய முன்வர வேண்டும்.

அதன்படி புதுச்சேரி கட்டுமான வாரியத்தில் உள்ள நிதியை உடனே விடு வித்து கட்டுமானம், அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு தலா ரூ.5000 உடனே வழங்க  நடவடிக்கை எடுக்க  வேண்டும். இதன்  மூலம் வருமானம் இன்றி அல்லல்பட்டு வரும் ஆயிரக்கணக்கான  கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்கள், கடை ஊழி யர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள்  உள்ளிட்ட அனைத்து முறைச்சாரா தொழி லாளர்களின் குடும்பத்தை  பாதுகாக்க முடியும். புதுச்சேரி அரசும், தலைமை செய லாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.