tamilnadu

img

இந்நாள் ஆகஸ்ட் 04 இதற்கு முன்னால்

1693 - சாம்ப்பேன் பானத்தை, டாம் பெரிஞான் என்ற துறவி கண்டுபிடித்த நாளாக இது வழமை யாகக் குறிப்பிடப்படுகிறது. உண்மையில் அவருக்குமுன்பே சாம்ப்பேன் இருந்திருந்தாலும், அதன் தயாரிப்பு முறையில் அவர் உருவாக்கிய சில நடைமுறைகளே இன்றுவரை பின்பற்றப்படுகின்றன. சாம்ப்பேன் என்பது, பிரான்சிலுள்ள ஒரு பகுதியின் பெயர். ஃப்ரான்சின் வடகிழக்குப் பகுதி யிலுள்ள இது, பண்டைய காலத்தில் சாம்ப்பேன் மாநிலம் என்றழைக்கப்பட்டது. கம்ப்பேனியா என்ற லத்தீன் சொல்லிலி ருந்து சாம்ப்பேன் என்ற பெயர் உருவானது. இத்தாலியி லுள்ள கம்ப்பேனியா என்ற பகுதியைப்போலவே, ஏற்ற இறக்கமான மலைகளைக்கொண்ட பகுதி என்பதால் இப்பகு திக்கு இப்பெயர் ஏற்பட்டது. பொதுவாக மினுமினுப்பான வெள்ளை ஒயின் சாம்ப்பேன் என்ற ழைக்கப் பட்டாலும், சாம்ப்பேன் பகுதி யில் விளையும் (பெரும்பாலும் பினோட் நோயர் வகை) திராட்சைகளைக் கொண்டு, அதற்கென்று ஏற்படுத்தப்பட்ட முறைகளின்படி உரு வாக்கப்பட்டவை தவிர மற்றவற்றை சாம்ப்பேன் என்றழைப்பது பல நாடுகளில் குற்றமாகவே உள்ளது.

குளிர்காலத்தில் சாம்ப்பேன் பகுதியில் நிலவும் மிக அதிகக் குளிரால், புளித்தல் பாதியிலேயே நின்றுவிடும். குளிர் குறையும்போது, யீஸ்ட்-கள் மீண்டும் விழிப்புற்று புளிக்கச்செய்யும்போது, கரியமில வாயு அதிகம் வெளிப்படுவதால், குமிழ்கள் ஏற்படுவதுடன் பாட்டில்களும் வெடித்துவிடும். பாட்டில் வெடிக்காவிட்டாலும் இந்தக் குமிழ்களை ஒயினின் குறையாகக் கருதி சாத்தானின் ஒயின் என்றழைத்த இப்பகுதியினர், அருகிலுள்ள பர்கண்டியில் உருவாகும் ஒயினைப்போல தங்கள் ஒயின் பெயர்பெறவில்லை என்று வருந்திய காலத்தில்தான், பெரிஞான், பாட்டில் உடையாமல் சிறப்பான ஒயினைத் தயாரிக்கும் வழிகளை உருவாக்கினார். 1715இல் பதினான்காம் லூயி மறைந்து, 5 வயது பதினைந்தாம் லூயி அரசரானபோது, காப்பாளராக ஆட்சியை நடத்திய ஆர்லியன்சின் டியூக் இரண்டாம் பிலிப், அரசு நிகழ்ச்சிகளில் சாம்ப்பேனுக்கு முக்கியத்துவம் அளித்ததையடுத்து, உயர்குடியினரின் பானமாக அது பரவத்தொடங்கியது. தற்போது, குறிப்பிட்ட அளவு புளித்தவுடன் மற்றொரு கொள்கலனுக்கு(பொதுவாக பாட்டிலுக்கு) மாற்றப்பட்டு, மீண்டும் யீஸ்ட்டும், சர்க்கரையும் சேர்க்கப்பட்டு, புளித்தபின் யீஸ்ட் படிவுகள் தனித்துவமான முறையில் வெளியேற்றப்பட்டபின் மீண்டும் பாட்டில் சீல் வைக்கப்பட்டு, (விரும்பியே ஏராளமான குமிழ்களுடன்!) சாம்ப்பேன் தயாரிக்கப்படுகிறது. சாம்ப்பேன் கூட்டமைப்பான சிஐவிசி அனுமதித்தால்தான், ஓர் ஒயினை சாம்ப்பேன் என்றழைக்க முடியும்.  1950க்குப்பின் கொண்டாட்டங்கள், ஆடம்பரம் ஆகியவற்றின் அடையாளமாக சாம்ப்பேன் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தது.