சென்னை, மார்ச் 28- உலகத்தரம் வாய்ந்த தனி மனித பாதுகாப்பு கவசங்களை சிகிச்சையளிக்கும் மருத்து வர்களுக்கும், செவிலியர்க ளுக்கும் தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக விளங்கும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவ டிக்கைகளை முழு மனதுடன் வரவேற்கிறது.
உலகையே அச்சுறுத்தும் கொடிய கோவிட் 19 நோய்த் தொற்றை வேரோடு அழிப்ப தற்கு தமிழக அரசுடன் உற்சா கத்துடனும், உத்வேகத்துடனும் அரசு மருத்துவர்கள் இணைந்து செயல்படுவோம் என உறுதி யளிக்கிறோம். கொரோனா தொற்று மூன்றா வது நிலையை அடைந்து சமூக தொற்றாக அச்சுறுத்தும் வேளை யில் தமிழக அரசிற்கு சில வேண்டுகோள்களை முன் வைக்க கடமைப்பட்டிருக்கி றோம். கொரோனா தொற்று நட வடிக்கைகளில் போர்முனையில் இருந்தாலும் எங்களது சமூக பொறுப்பை உணர்ந்து நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்ற எண்ணத் தில் அனைத்து அரசு மருத்துவர்க ளும் ஒருநாள் ஊதியத்தை தமி ழக முதல்வரின் கொரோனா தடுப்பு நலநிதிக்கு அளிக்கி றோம்.
கொரோன தடுப்பு நடவ டிக்கைகளில் போர்க்கால அடிப்ப டையில் எதையும் எதிர்பார்க்கா மல் சேவை செய்துவருகிறோம், சேவையில் ஈடுபட்டுள்ள மருத்து வத்துறையினருக்கு ஒருமாத கால ஊதியத்தை சிறப்பு ஊதிய மாக வழங்க உத்தரவு பிறப்பித் ததை வரவேற்கிறோம். இருந்த போதிலும் அரசு மருத்துவர்க ளுக்கு நிலுவையிலுள்ள கோரிக் கைகளை நிறைவேற்றினாலே போதும் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறோம். கொரோனா தொற்று நெருக்கடி நிலையை சமாளிக்க கூடுதலாக 500 மருத்துவர்கள் நிய மிக்கப்படுவார்கள் என்ற அறி விப்பை வரவேற்றாலும் சுகா தாரத்துறை அமைச்சர் அரசு மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்க ளையும் பாது காக்கும் என்று அறிவித்திருக்கி றார்கள்.
சமீபத்தில் நியாயமான கோரிக்கைகளுக்கு போராடிய ஆரம்ப சுகாதார நிலைய மருத்து வர்கள், உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள், பெண் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட 118 அரசு மருத்துவர்கள் தண்டனை பணி மாற்றத்தால் தொலை தூரங்க ளில் அவதியுற்று வருகின்றனர். மேலும் குடும்பங்களை, குழந்தை களை பிரிந்து கடும் மன உளைச்சலில் பணிசெய்துவரு கின்றனர். கொரோனா தொற்று அச்சுறுத்தும் வேளையில் பணி யிடங்களுக்கு சென்றுவருவதில் மிகுந்த சிரமத்தில் இருக்கின்ற னர், மேலும் உயிர்காக்க வேண்டிய அரசு மருத்துவர்கள் தொலைதூர பயணங்களால் தங்கள் உடல் நலன் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே 118 அரசு மருத்துவர்களின் நலன் கருதி தண்டனை பணியிடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து அவரவர் சொந்த இடங்களில் மீள்பணியமர்த்த வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அப்பொ ழுதுதான் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்களும், ஏனைய அரசு மருத்துவர்களும் அரசின்மீது மிகுந்த நம்பிக்கையுடன் பணி யாற்றுவார்கள் என்பதை தெரி வித்து க்கொள்கிறோம். புதிய நியமனம் முன்பு இதனை செய்ய வேண்டுகிறோம்.
கொரோனா தொற்று 2வது கட்டத்தை எட்டியிருக்கும் இந்த சமயத்தில் களப்பணியாற்றும் அரசுமருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களின் நலன் கருதி எங்களின் சில வேண்டு கோள்களை தமிழக அரசு பரி சீலிக்க வேண்டுகிறோம். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி மைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைப்பதை விட கொரோனா தொற்றுக்கென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுவீச்சில் இயங்கக்கூடிய பிரத்தியோக மருத்துவமனைகளை உடனடி யாக அமைக்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை யளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களை தனிமைப்படுத்த ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் உணவு, அத்தியாவசிய தேவை கள் ஏற்பாடு செய்து அவர்களை தனிமைப்படுத்தி அவர்களிட மிருந்து குடும்ப உறுப்பினர்களுக் கும்,சமுதாயத்திலும் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உலகத்தரம் வாய்ந்த, தனி மனித பாதுகாப்பு கவசங்களை சிகிச்சையளிக்கும் மருத்துவர்க ளுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவமனை பணியாளர்க ளுக்கும், தனிமைப்படுத்தப்பட் டோரை கண்காணிக்கும் களப் பணியாளர்களுக்கும் இடை வெளி இல்லாமல் கிடைத்திட வகை செய்ய கேட்டுக்கொள்கி றோம். முறையாக PPE பாது காப்பு உபகரணங்கள் நேரடியாக களத்தில் நிற்பவர்களுக்கு சென்றடைகிறதா என்பதை கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்கு னர்கள், தலைமை மருத்து வர்கள், வட்டார மருத்துவர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.