அரியலூர், ஜூலை 21- அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேசிய அடையாள அட்டையை காண்பித்து நகலினை வழங்கி இதுவரை 11 ஆயி ரத்து 714 பேர் கொரோனா நிவாரண உதவித் தொகை பெற்றுள்ளனர். மேலும் இதுவரை நிவாரண உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனா ளிகள், தங்களின் தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நல அலுவலகத்தில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் உதவித்தொகை பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.