tamilnadu

திருமானூர் சிபிஎம் அலுவலகம் சூறையாடல் பாஜகவினர் மீது நடவடிக்கை கோரி ஜூலை 30 ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூலை 22- அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றி யத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அலுவலகத்தினை கடந்த 3.7.2020 அன்று இரவில் ஆசிரியர்  பாஸ்கர் மற்றும் கூலிப்ப டைகளுடன் அலுவலகத்தின் கூரையான சிமெண்டு ஓடுகளையும் மேற்கூறிய வெய்ய  பயன்படுத்திய இருந்த இரும்பு கம்பிகள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு மேற்கூரை  விட்டத்தில் பொறுத்தப்பட்டிருந்த மூன்று சீலிங் ஃபேன்கள், ஒரு டேபிள் ஃபேன், 21 பிளா ஸ்டிக் நாற்காலிகள், 6 டியுப் லைட்டுகள், ஒரு  மர டேபிள்களை பாஜகவினர் எடுத்து சென்றனர். இதுகுறித்து ஜூலை 4 அன்று திரு மானூர் காவல்நிலையத்தில் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.சாமிதுரை பாஜகவினர் மீது புகார் கொடுத்தார். ஆனால் இன்றுவரை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையையும், அரியலூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிரியர் பாஸ்கர், அவருடன் செயல்பட்டவர்கள் மீதும்  உடனடியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருமானூர் காவல் நிலை யம் முன்பு ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.சாமிதுரை தலைமையில் ஜூலை 30-இல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.