அரியலூர், ஜூலை 30- அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி பகுதியில் ஊரடங்கு காலத்தில் இரவில் லாரி போக்குவரத்து குறித்து கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை த்தொடர்ந்து சம்பவத்தன்று மக்கள் ஒன்று சேர்ந்து, அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்தனர். தகவல் அறிந்து வந்த தா.பழூர் காவல்துறை யினர் விசாரணை நடத்தினர். இதில் காரைக்குறிச்சி கல் லாமலம் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் கணே சன் (என்ற) பஞ்சநாதன் (50) என்பவருக்கு சொந்தமான லாரியில் பஞ்சநாதன் மகன் செல்லதுரை மணல் ஏற்றி வந்துள்ளார். இதை தொடர்ந்து லாரியை பறி முதல் செய்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.