tamilnadu

img

சாலை ஆக்கிரமிப்பு

 அரியலூர், நவ.6- போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் அரியலூர் நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலையம் செல்ல, சிமெண்டு சாலை அமைத்து இருந்தது. அதன் அருகில் வீடு கட்டியிருந்ந அரசியல் பிரமுகர் ஒருவர்,  அந்த சாலையை மறித்து இரும்பு கேட் அமைத்து, கருங்கல் ஜல்லி மற்றும் மணல் இறக்கி வைத்து விலைக்கு விற்று வருகிறார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் அவரிடமிருந்து நடைபாதையை விடுவித்து மக்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.