tamilnadu

img

ஏழை மக்கள், மாணவர் குடும்பங்களுக்கு நிவாரணம்

அரியலூர், மே 13- அரியலூர் மாவட்டம் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் தாளாளர் ரகுநாதன் தங்களது நிறுவனம் சார்பில் ஊரடங்கால் பாதிக் கப்பட்ட 4 ஆயிரம் ஏழை எளியோருக்கு ஐந்து கிலோ அரிசி, காய்கறிகள் வழங்குவதாக திட்டமி டப்பட்டு இதன் துவக்க  நிகழ்ச்சியாக உடையார் பாளையம் அம்மன் கோயி லில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் மீனாட்சி ராமசாமி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியை புதன் அன்று துவக்கி வைத்து நான்கு நாட்களுக்கு மொத்த நலத்திட்டங்களும் வழங் கப்படும் என்று கல்லூரி தாளா ளர் ரகுநாதன் கூறினார். இதே போல் துபாபுரம் ஊராட்சி ஒன்றிய தொ டக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.கண்ணகி, பள்ளி யில் பயிலும் 62 மாணவ,  மாணவியர் குடும்பத்தி னருக்கு, அவரவர்கள் இல்லம் தேடிச் சென்று தலா ஆயிரம் ரூபாய் வீதம் மாணவர்களின் பெற்றோர்க ளிடம் ஊராட்சி தலைவர் ரமேஷ் முன்னிலையில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.