tamilnadu

img

நிவாரண உதவி வழங்கல்  

அரியலூர், மே 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூர் உடையார்பாளையம் தாலுகா ஜெயங்கொண்டம் ஒன்றியம் மகிமைபுரம் இருளர் பழங்குடியினர் காலனியில் உள்ள அனைவருக்கும் அரிசி, காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களை, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் வழங்கினார்.  ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடா ஜலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர் இறையூர் கிராமத்தில் திமுக மாவட்டச் செய லாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ். எஸ். சிவசங்கர் ஏழை-எளிய வயதானவர்களுக்கு அரிசி காய்கறிகள் மளிகை சாமான்கள் வழங்கினார்.  ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் அறிவழகன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.