tamilnadu

img

சாலை வசதியின்றி தவிக்கும் மக்கள்

அரியலூர், டிச.3- அரியலூர் வட்டம் பெரியதிருக்கோணம் ஊராட்சிக்குட் பட்ட செட்டித்திருக்கோணம் கிராமத்தில் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உரிய . சாலை வசதிகள் இல்லைஇதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.  இந்த சூழலில் தொடர் மழையால் இப்பகுதி முழுவதும் நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், பொதுமக்கள் மிகவும் சிரமபப்படுகின்றனர். எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் உடன டியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் ஒன்றியச் செயலாளர் துரை அருணன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள் ளார்.