tamilnadu

img

கஜா புயலில் சேதமான அரசுப் பள்ளிக்கு ஓய்வூதியர் சங்கம் உதவி

நாகப்பட்டினம், அக்.7- நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம், கரியாபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம்-15ல் தாக்கிய ‘கஜா புயலினால், வீழ்ந்து விட்டன. இப்பள்ளியின் சுற்றுச் சுவரைக் கட்டுவதற்காகத் தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம், மாநில மையம் சார்பில் சனிக்கிழமை அன்று ரூ.ஒரு லட்சத்து, 25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. கரியாபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல. ஸ்ரீதரன், மாநிலப் பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மாநிலப் பொருளாளர் என். ஜெயச்சந்திரன் ஆகியோர் இணைந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ரெ.அமுதராசுவிடம், ரூ.1, 25,000 வழங்கினர். நிதியைப் பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர் ஏற்புரையாற்ற, சங்கத்தின் வேதாரணியம் வட்டத் தலைவர் ஆர்.குணசேகரன் நன்றி கூறினார்.

;