tamilnadu

img

கிராமப்புறச் சாலைகள் சீா்செய்யக்கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

அருமனை:
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சியின் கிராமப்புற சாலைகள் பல ஆண்டுகளாக  மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு  மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இச்சாலைகளை உடனடியாக சீா் செய்யக்கேட்டும், குடிநீா் இணைப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனே குடிநீா் இணைப்பு வழங்க கேட்டும்,. தெருவிளக்குகளை சீா் செய்யக்கேட்டும் மார்க்சிஸ்ட் கட்சி பாகோடு பேரூராட்சி பகுதி கிளைசார்பாக  பேரூராட்சி அலுவலகம்முன்  மேல்புறம் வட்டாரக்குழு உறுப்பினா் கேதரின் எஸ்தா்டானி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் கவுன்சிலா் ராஜமணி, வட்டாரச்செயலாளா் ஜெயராஜ், சுரேஷ்குமார், கிறிஸ்துதாஸ், வாலிபா் சங்க மாவட்டச்செயலாளா்  எட்வின் பிரைட்  உட்பட பலா்கலந்து கொண்டனர். 

;