அரியலூர், செப்.17- அரியலூர் மாவட்டம் தா.ழூர் ஒன்றி யம் நாதம் பேட்டை கிராமத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி யளிப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மணி பன்னீர்செல்வம் செல்வராசு சின்னத்துரை சிவப்பிர காசம் உமாதேவி தர்மலிங்கம் காளி முத்து சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் எம்.சின்ன துரை, மாவட்ட செயலாளர் ஆர். மணி வேல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். இளங்கோவன், ஒன்றிய செயலா ளர் ஜெ. ராதாகிருஷ்ணன் மாவட்ட குழு உறுப்பினர் எம். தங்கராசு, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பழனிவேல் ராமலிங்கம் அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சி நிதியாக மாநில குழு உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டது. அடிக்காமலை கிராமத்திற்கு நகரப்பேருந்து இயங்கவேண்டும் வாழைக்குறிச்சி காலனியில் இருந்து இடங்கண்ணி வரை பொன்னாற்றங் கரையும் தார் சாலை அமைக்க வேண் டும். பொன்னாற்று புது பாலத்தில் இரண்டு புறங்களிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு வசதியாக படித்துறை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டது. பல்வேறு மாற்றுக் கட்சியில் இருந்து பலர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.