tamilnadu

img

நிவாரண உதவிகளுக்கு தடை விதிப்பதா?

அரசுக்கு கட்சிகள் கடும் கண்டனம்

சென்னை ஏப்.13- ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடி யாக சமூக அமைப்புகள் அரசி யல் கட்சிகள் உதவிகள் வழங்க  தமிழக அரசு தடைவிதித்துள்ள தற்கு பல்வேறு கட்சிகள் கண்ட னம் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகள், தன் னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நல அமைப்புகள், வசதி வாய்ப்புகள் உள்ளோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேர டியாக உதவிகள் வழங்கக் கூடாது என தமிழக அரசு உத்த ரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழக அரசின் மனிதாபி மானமற்ற இந்த செயலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தலைவர் கே. எஸ். அழகிரி, மதி முக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு பத்திரிகையாளர்  சங்கம் (டியுஜே) மாநிலத் தலை வர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் உள்ளிட்ட பலரும் கண்டித்த தோடு இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கொராணா வைரஸ் தொற்று நோய் பரவல் மனித சமூகம்  சந்தித்து வரும் மிகப் பெரும் சவாலாகும். கடந்த 19 நாட்களாக  நாடு முழுவதும் ஊரடங்கு அம லில் இருக்கிறது. ஊரடங்கு காலம் குறைந்த பட்சம் மேலும் இரு வாரங்கள் நீடிக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெரும்பகுதி மக்கள் வாழ்க்கை  மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளன.

அரசின் சிறு உதவி சற்று  ஆறுதல் அளிப்பதாக இருக்கி றது. தேசிய அளவிலான இயற்கை பேரிடராக ஏற் பட்டுள்ள இந்த நெருக்கடியை அரசும், ஆளும் கட்சி மட்டுமே சமாளித்து விடலாம் எனக் கருதுவது அறிவார்ந்த செயலா காது.

அனைவரும் ஒருங்கி ணைந்து எதிர் கொள்ள வேண்  டிய கடுமையான தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து, காணொலி காட்சி வழியாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துமாறு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரி யதை நிராகரித்த முதலமைச்சர் எதிர்கட்சி தலைவர்களை ஏள னம் செய்தார். இருப்பினும் மக்கள் நலன் கருதி எதிர்கட்சி கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கியதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

இது தவிர கொரானா வைரஸ் தொற்று நோய் பரவல் தடுப்பு மருந்துவ கருவிகள் துணையோடு, முகக்கவசம் அணிந்து, சானிடைசர் பயன்ப டுத்தி, சமூக இடைவெளி கடைப்  பிடித்து, தாங்க முடியாத வாழ்க்கை துயரங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகள் வழங்கி வருவதை நோய் பரப்பும் குற்றச்செயல் என தமி ழக அரசு அறிவித்துள்ளது சரி யல்ல என்றும் அக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

திமுக வழக்கு

இந்நிலையில் கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட உதவி களை அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்க ளும் வழங்கக் கூடாது என தமி ழக அரசு உத்தரவு பிறப்பித் ்துள்ள உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.