அரியலூர், ஆக.8- அரியலூர் மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் வாங்க விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஆக.14 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரு ம்பும் உழைக்கும் மகளிர் தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்தில் இலவசமாகவும் மற்றும் www.tamilnadumahlir.org என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப் பிக்கலாம் என ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார்.