tamilnadu

img

விருது வழங்கும் விழா  

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங் கள் மற்றும் பரப்ரமம் பவுண்டேசன் சார்பில் சிறந்த பெற்றோருக்கான விருது வழங்கும் விழா அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பரப்ரமம் பவுண்டே சன் நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர் எம்ஆர் ரகுநாதன், சிறந்த பெற்றோருக்கு விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில், அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள் தாளாளர் உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். ஆசிரியர் வைத்திலிங்கம் நன்றி கூறினார்.

;