tamilnadu

img

செந்துறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறையில் வட்டார அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு போதிய மருத் துவர்கள், செவிலியர்கள் பற்றாக்க்குறை உள்ள நிலையில் நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 6 மருத் துவர்கள் பணிபுரியும் இந்தமருத்துவமனை யில் ஒருமருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். அந்த மருத்துவரும் அவசர சிகிச்சை பிரிவிற்கு ஜெயங்கொண்டம் சென்றுவிட்டால் இங்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவரை இல்லாத நிலை ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் மருத்துவர் விடுப்பில் இருந்தால் அவசர சிகிச்சை, பிரசவ சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் மருந்துகள் போதியஅளவு இருப்பு இல்லை. எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செந்துறை வட்டாரச் செயலாளர் கந்தசாமிகோரிக்கை விடுத்துள்ளார்.

;