tamilnadu

அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

சகி சேவை  மையத்தில் பணியாற்ற  வாய்ப்பு

அரியலூர், ஆக.29- அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்க ளுக்கு தேவைப்படும் அவசர கால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம், உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாது காக்க சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது. அதில் பணிபுரிய ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். விரு ப்பம் உள்ளவர்கள் தங்கள் சுயவிவரங்களுடன் செப்.12-க்குள் மாலை 5.45-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தொடர்புக்கு மா வட்ட சமூக நல அலுவல கம், அறை எண் 20, மாவட்ட ஆட்சியரக வளாகம், அரிய லூர்- 621704 என்ற முகவரி யில் அணுகலாம் என ஆட்சி யர் ரத்னா தெரிவித்துள்ளார்.


மாணவர்களுக்கு கல்வி உதவி

தரங்கம்பாடி, ஆக.29- மயிலாடுதுறையில் இயங்கி வருகிற ஆர்.ஹச்.வி  குழுமத்தின் சார்பாக 22 மாணவர்களுக்கு சேரன் உடற்கல்வி கல்லூரியில் கல்வி பயில ஆர்.ஹச்.வி.சே ரிட்டபுல் டிரஸ்ட் நிறுவன தலைவர் முனைவர் மா.ரஜினி ஏற்பாட்டில் கல்லூ ரியின் நிர்வாக அலுவலர்  முனைவர்.எம்.வெங்கடே சன் மாணவ-மாணவிக ளுக்கு அனுமதி வழங்கினார். மாணவர்களின் படிப்பு செல வுகளை ஆர்.ஹச்.வி.சேரிட்ட புல் டிரஸ்ட் ஏற்றுக் கொண்டு ள்ளது.  சேர்க்கையின் போது குழுமத்தின் மேலாளர் காசி. கார்த்திகேயன் மற்றும் மயி லாடுதுறை மாவட்ட கோகோ  அமைப்பின் தலைவர் குத்தா லம் எஸ்.ஹாஜா, பூரான் ரமேஷ் உடனிருந்தனர்.


அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை

அறந்தாங்கி, ஆக.29- புதுக்கோட்டை மாவ ட்டம் ஆவுடையார்கோ விலை அடுத்த பெருநாவலூ ரில் இயங்கி வரும் அறந்தா ங்கி அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் 2020-2021  ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இணை யதளம் வழியாக நடத்த ப்பட்டு ஆக.28 அன்று சிறப்பு ஒதுக்கீட்டிலும் ஆக.29 அன்று முதலாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் மற்றும் இளங்கலை முத லாம் ஆண்டு வணிக நிர்வா கவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடை பெற்றது. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் இரா.கண்ணன் சேர்க்கைக்கான அனுமதி சான்று வழங்கி னார். 


ஓச்சம்பட்டியில்  சிபிஎம் கிளை தொடக்கம்

புதுக்கோட்டை, ஆக.29- புதுக்கோட்டை மாவ ட்டம் திருமயம் ஒன்றியம் ஓச்சம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளைத் தொடக்க விழா நடைபெற்றது. கிளைச் செய லாளர் மாரிமுத்து தலைமை  வகித்தார். கட்சியின் கொடி யை ஏற்றி வைத்து மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரையாற்றினார். தக வல் பலகையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. அன்புமணவாளன் திறந்து வைத்தார். ஒன்றியச் செயலா ளர் சி.ஜீவானந்தம், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் வீர மணி, பழனிவேலு, ஆரோ க்கியசாமி உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


 

;