tamilnadu

அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் முக்கிய செய்திகள்

கொரோனா: ஜெயங்கொண்டம் காவல் நிலையம் மூடல்

 அரியலூர், ஆக.6- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் காவல் நிலைய முதன்மை காவலர்கள் இரண்டு பேர் மற்றும் எழுத்தர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலை யம் மூடப்பட்டது. காவல் நிலையம் முழு வதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடப்படுவ தாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர் தெரிவித்துள்ளார். புகார் அளிக்க வரு பவர்களுக்கு வசதியாக புகார் பெட்டி காவல் நிலையம் முன்பு வைக்கப்பட்டு உள்ளது.

அரசு இசைக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

 தஞ்சாவூர், ஆக.6- திருவையாறு அரசு இசைக் கல்லூரி யில் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப் பங்களை www.artandculure.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Registra tion பகுதிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 17 வரை இருபா லர் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவ லுக்கு 94876-24902, 94424-59694, 94430-07978, 04362-261600 தொலைபேசி எண் களை தொடர்பு கொள்ளலாம் என திருவையாறு இசைக்கல்லூரி முதல்வர் ப.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

நுகர்பொருள் சேமிப்புக் கிடங்கில் ஆய்வு

  தரங்கம்பாடி, ஆக.6- மயிலாடுதுறை மாவட்டம் பொன் செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்புக் கிடங்கில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் த.பாபு வியாழனன்று  ஆய்வு மேற்கொண்டார். கிடங்கிலிருந்து ரேசன் அங்காடிகளுக்கு இம்மாதத்திற்கான  ஏற்றுமதி செய்யப்படும் அரிசி எடை அளவு சரியாக உள்ளதா மற்றும் பொ ருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் முடிகண்டநல்லூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிக ளிலுள்ள அங்காடிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் படைவீரர்களின் கவனத்திற்கு

திருவாரூர், ஆக.6- திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்க ளுக்கு நடப்பு கல்வி படிப்பிற்கான சார்ந்தோர் சான்று (2020-21) மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.  கோவிட்-19 தொடர்பான ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவல கத்திற்கு நேரில் வர இயலாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித் திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

முன்னாள் படைவீரர்கள் https://esmwel.tn.gov.in என்ற இணைய முகமையில் சார்ந்தோர் சான்று பெறு வதற்கான வழிமுறைகள் மற்றும் படிவம் ஆகியவற்றினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பூர்த்தி செய்த படிவம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றி தழ், ஓய்வூதிய ஆணை, படைவிலகல் சான்று (அனைத்து பக்கங்கள்) மேல் படிப்பிற்காக விண்ணப்பம் செய்த படிவம் நகல் ஆகியவற்றினை இவ்வலு வலக மின்னஞ்சல் முகவரி exweltvr@tn.gov.in–க்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04366-290080) தொடர்பு கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

தஞ்சாவூர், ஆக.6- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் வடக்கு, தெற்கு என இரு ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டு தெற்கு ஒன்றியக் கழக பொறுப்பாளராக க.அன்பழகன், வடக்கு பொறுப்பாளராக இளங்கோ ஆகியோர் திமுக தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.  வியாழக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராவூரணியில் உள்ள அண்ணா சிலைக்கு க.அன்பழகன், இளங்கோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றி யச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், நகரக் கழகச் செயலாளர் தனம் கோ. நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.