சென்னை,ஆக.21- கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோ ட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப் பட்டுள்ளன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், அரசுப்பள்ளி மாணவர் களுக்கு தொலைக்காட்சிகள் வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறிய தாவது:
10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மட்டுமின்றி 8,11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தமிழக அரசு இருமொழிக் கொள்கை யில் உறுதியாக உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் நட வடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் இது வரை 50 ஆயிரம் மாண வர்கள் கூடுதலாக சேர்க்கப் பட்டுள்ளனர். கொரோனா தாக்கம் குறைந்த பின், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.