tamilnadu

img

போக்குவரத்து நெரிசலால் தொடர் விபத்துகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா எதிரில் காய்கறிகள் மார்க்கெட் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மீன் மார்க்கெட் உள்ளது. மீன் மார்க்கெட்டில் காலையில் மீன் வாங்குபவர்கள் அதிகம். அந்த பகுதி சென்றாலே பயங்கரமான துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. மீன் வாங்குபவர்கள் தங்களது டூவீலரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு கடைக்கு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது,  மேலும் இந்த பகுதியில் அதன் மிக அருகில் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. மீன் மார்க்கெட்டில் காய்கறி மார்க்கெட் இருக்கும் ஒதுக்குப்புற மாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இடத்தினை தேர்வு செய்து அமைத்துக் கொடுத்தால் சாலை விபத்துகளை தவிர்க்கலாம். அத்துடன் வாரச்சந்தை அமைந்துள்ள இடத்தில் பாதி இடத்தை நகராட்சி கட்டிடத்திற்கு எடுத்துக் கொண்டு அதில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.  வாரச் சந்தைக்கு புதிய இடம் இல்லாமல் திங்கட்கிழமையும் வாரச் சந்தையில் வியாபாரி கள் காய்கறி விற்பவர்கள் சாலையை மறித்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் வாரம் திங்கள் என்றால் பல்வேறு விபத்துக்கள் அங்கு நடப்பது இயல்பாகி கொண்டிருக்கிறது. இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க மாவட்ட செயலாளர் கே.மகாராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.