tamilnadu

img

கோவிட்டுக்குப் பிறகு பசியும் பஞ்சமும் ஐ.நா பொதுச்செயலாளரின் எச்சரிக்கை

நியூயார்க், மே 31- கோவிட் கொள்ளைநோய் உலகில் பசி பட்டினியையும், உலகளாவிய உற்பத்தியில் 8.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.641 லட்சம் கோடி ருபாய்) இழப்பையும் ஏற்படுத்தக்கூடும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.  ஐ.நா மன்றத்தில் நடந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான உயர்மட்ட கூட்டத்தில் அவர் பேசினார். 1930 களின் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் இது மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும். நாடுகள் ஒன்றிணைந்து மந்தநிலையை எதிர்த்துப் போராட வேண்டும் என்று அவர் கூறினார். “அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், ஒரு நுண்ணுயிரால் ஒட்டுமொத்த மனித குலமும் கடும் நெருக்கடியைக் கடந்து செல்கிறது.  நாம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறோம் என்பதை கோவிட் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்திலேயே எதிர்வினையாற்றுவதன் மூலம் மட்டுமே சிக்கல்களை சமாளிக்க முடியும். 60 லட்சம் மக்கள் வறுமையில் சிக்கி விட்டனர். உலகளவில், 160 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர்” என அவர் கூறினார்.