tamilnadu

img

டெக்சாஸ் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாயினர். 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 2 பேர் பலியாயினர். ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தேவாலயப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அந்தக் காட்சிகளை நேரலை செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;