tamilnadu

img

உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை அதிர வைத்த சிறுமி

அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை கலந்து கொண்ட  விழாவில் உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் என்று 16 வயது சிறுமி கேள்வி எழுப்பியது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 
16 வயதான கிரெட்டா துன்பர்க் சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆவார் . பருவநிலை மாற்றத்தால் உலகில் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச் சூழல் சீர்கேடுகளை தவிர்க்க தொடர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு டைம் பத்திரிகை அட்டைப்படத்தில் சிறந்த போராளியாக இடம் பெற்றார். டைம் பத்திரிகை கிரெட்டாவை அடுத்த தலைமுறை தலைவர் என்று பெருமைபடுத்தியது. கிரெட்டா துன்பர்க் மற்றும் அவரது இயக்கம் குறித்து மேக் தி வேர்ல்ட் கிரெட்டா அகெய்ன் என்ற 30 நிமிட ஆவணப்படும் எடுக்கப்பட்டது. கிரெட்டா துன்பர்க் விளைவுகள் என சில ஊடகங்கள் இவரது முயற்சியை அடையாளப்படுத்துகின்றன 
இந்நிலையில் தற்போது நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த தலைவர்கள் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வுகளும், உடனடி நடவடிக்கைகளும் அவசியம் என்று பேசினர். இதில் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 
இந்நிலையில் காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனியாளாகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சுவீடனைச்  சேர்ந்த கிரெட்டா துன்பெர்க்கும்  உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
அம்மாநாட்டில் பேசிய கிரெட்டா, இளைய சமுதாயம் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. வளி மண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில் இளைய தலைமுறையினரை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை நோக்கி கடும் கோபத்துடன்  குற்றம் சாட்டினார். மேலும் "உலகின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும் சரிந்து கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் அழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பணம் பற்றியும் பொருளாதார வளர்ச்சி பற்றிய விசித்திரக் கதைகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்?," என உலக நாடுகளின் தலைவர்களை நோக்கிக் கண்ணீர் மல்க கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பினார். மேலும், காலநிலை மாற்றத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.